Pages

WELCOME TO MY BLOG

Iam very happy to open my blog and always welcome everyone and inform your friends to visit .Thankyou for using it.

Mar 26, 2012

kathalum natpum

காதல் + நட்பு

இந்த இரண்டுக்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு.
நட்பு என்பது நாம் எதையும் பகிர்ந்து கொள்ளசொல்லும் . அது ஒரு உன்னதமான உணர்வு. நீங்கள் வார்த்தைகளால் எந்த அளவு நம்பிக்கையையும்  தரலாம், பெறலாம் . அப்படி தரும்போது நட்பு நம்மை அடையாளம் காட்டும்.  நம்பிக்கையான உறவுகளையும், உணர்வுகளையும் திருப்பி தரும்.
இந்த எண்ணம் மேலே போகும்போதுதான் சிலருக்கு நட்புக்குள் காதல் வருகிறது.
ஆனால்,இந்த நட்பை உறுதியாக உணர்ந்து, நம்பிக்கை வளர்ந்த காதல் தான் வாழ்கை முழுவதும் வெற்றி பெறுகிறது.

காதல்
நட்பின் உதவி இல்லாமல் ஒரு காதல் சிலருக்கு தெய்வீகமானது, புனிதமானது. இன்னும் சிலருக்கு அது ஒரு பொக்கிஷம். பல பேருக்கு ,பல வகைகளில் தோன்றும் ஒரு வகையான உணர்ச்சி, கவரக்கூடிய உணர்வு.
பார்த்தவுடன் தோன்றும் காதல் கூட ஒரு நட்புதான். பார்த்தவுடன் ஒருவரை பிடித்துபோகும், பழகதோன்றும். காதல் ஒரு மனிதனை உயர்ந்தவனாக மாற்றவும் செய்யும்,அதே மனிதனை சாகவும் சொல்லும் வலிமை கொண்டது.
காதல் ஒருவனை எப்படி வேண்டுமானாலும் செதுக்கும். அது காதலனோ காதலியையோ பொருத்தது. பக்குவப்பட்ட மனிதனின் காதல் வெற்றிபெறும்.

என்னை பொறுத்தவரையில் நட்பு ஒரு அழகான வட்டம்.  அது பலபேரை உள்ளடக்கியது .  அழகான வானவில்லைப் போல பல வண்ணங்கள் கொண்டது. நவரசங்களின் சங்கமம் என்றே சொல்லலாம். நம் துக்கத்தை உடனே மறைக்க கூடிய இடம், மறக்கச் சொல்லும் கூட்டம்.

காதல் இரண்டுபேர் கூடி வாழும் கலை. அது கலையோ காவியமோ அவர்களை பொருத்தது. இன்பமும் துன்பமும், பகிர்ந்து கொண்டு இறுதிவரை சேர்ந்து வாழும் கலை.